2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ரஷ்யாவில் பலியான கேரள தம்பதி: அடையாளம் காண ரத்த மாதிரிகள் அனுப்பி வைப்பு

துபாயில் இருந்து சென்ற விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான கேரள தம்பதியினரின் உடலை அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:50 pm

PTI

துபாயில் இருந்து சென்ற விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியான கேரள தம்பதியினரின் உடலை அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் மோகன் மற்றும் அவரது மனைவி அஞ்சுவின் உடல்களை அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் ரத்த மாதிரிகளைக் கொண்டு மரபணு சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மரபணு சோதனைக்காக, மோகனின் பெற்றோரிடம் இருந்தும், அஞ்சுவின் தாய் மற்றும் சகோதரரிடம் இருந்தும் மருத்துவக் குழுவினர் ரத்த மாதிரிகளை சேகரித்ததாக நெருங்கிய உறவினர் ஒருவர் கூறினார்.

ஃப்ளை துபாய் போயிங் 737 ரக விமானம் ரஷ்யாவில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இந்திய தம்பதியரான மோகன் - அஞ்சு உள்ளிட்ட 62 பேர் உயிரிழந்தனர்.

மோகனும் அஞ்சுவும் ரஷ்யாவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர் என்பதும், இரண்டு மாத விடுமுறைக்குப் பின் கடந்த வியாழக்கிழமைதான் இவர்கள் கொச்சியில் இருந்து ரஷ்யா திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.