வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குல்பர்க் சொசைட்டி வழக்கு: 24 பேர் குற்றவாளிகள், 36 பேர் விடுதலை

குஜராத் மாநிலம், குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்றும், இவ்வழக்கிலிருந்து 36 பேரை விடுதலை செய்தும் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Updated On :2 ஜூன் 2016, 7:49 am

புது தில்லி: குஜராத் மாநிலம், குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்றும், இவ்வழக்கிலிருந்து 36 பேரை விடுதலை செய்தும் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குஜராத்தில் அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்ட  வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமனறம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி அதுல் வைத்தியா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 36 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டடோரில் பாரதிய ஜனதா கவுன்சிலர் பிபின் பட்டேலும் ஒருவர். குல்பர்க் படுகொலை வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 6-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2002 பிப்ரவரி 27-ம் தேதி குஜராத்தின் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில் அடுத்த நாள் அகமதாபாத் சமன்பூராவில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் ஆயிரக்கணக்கானோர் அடங்கிய கும்பல் ஒன்று புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் எரித்தும், கொடூர ஆயுதங்களால் தாக்கியும் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் எம்.பி., இசன் ஹாப்ரி என்பவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.