திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

லக்னோவில் லாரி வீட்டின் மேல் மோதி விபத்து: 5 பேர் பலி, 4 பேர் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் லாரி வீட்டின் மேல் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:24 pm

ANI

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் லாரி வீட்டின் மேல் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்துள்ளனர்.

லக்னோவில், இன்று காலை 5 மணியளவில் மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி வளைவில் திருப்பும் போது நிலைதடுமாறி அருகே உள்ள இரண்டு வீடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த குழந்தைகள் மீது லாரி ஏறி இறங்கியது.

லாரியில் மணல் அதிகமாக இருந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் காயமடைந்தனர்.

அங்குள்ள சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என்று உயர் அதிகாரி சர்வேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.