தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோவாவில் கைது செய்யப்பட்டவரிடம் தேசிய புலனாய்வுத் துறையினர் விசாரணை

கோவாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரரின் மகனிடம் தேசிய புலனாய்வு துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

Updated On :4 பிப்ரவரி 2016, 11:18 am

கோவாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரரின் மகனிடம் தேசிய புலனாய்வு துறையினர் இன்று விசாரணை நடத்தினர்.

மும்பையைச் சேர்ந்தவர் சமீர் சார்தனா (44). பட்டயக் கணக்காளரான இவர் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்காக ஹாங் காங், மலேசியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் வேலை செய்து வந்தார். பிறப்பால் இந்துவான சார்தனா தற்போது இஸ்லாமிய மார்கத்தை பின்பற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் வாஸ்கோ ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றி திரிந்த சார்தனாவை கோவா போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சார்தனா இந்தியாவில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவங்கள் குறித்த தகவல்களை சேகரித்து வந்துள்ளார். அவரிடமிருந்து 5 பாஸ்போர்ட்களும், ஒரு மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் சார்தனாவிடம் விசாரணை நடத்திய அதிகாரி கூறுகையில், தற்போதைய நிலையில் பயங்கரவாதச் செயல்களில் அவர் ஈடுபட முயன்றதாக தகவல் ஏதும் இல்லை என்றார்.

பிரதமர் நரேந்திர மோடியையும், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கரையும் கொலை செய்ய போவதாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கடிதம் எழுதியிருந்ததைத் தொடர்ந்து கோவாவில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சார்தனா முன்னாள் ராணுவ வீரரின் மகனாவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.