பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

சரிதா நாயர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார் உம்மன் சாண்டி

சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் மீது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Updated On :8 ஏப்ரல் 2016, 12:29 pm

திருவனந்தபுரம்  : சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர் மீது, கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

உம்மன் சாண்டி தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, சரிதா நாயர் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து கேரள நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, உம்மன் சாண்டி, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவதூறான தகவலைக் கூறியதாக சரிதா நாயர் மீதும், இது தொடர்பான செய்தியை வெளியிட்ட 2 மலையாளம் நாளிதழ்களின் செய்தி ஆசிரியர்கள் மீதும் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

முன்னதாக, சூரிய மின்தகடு முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சரிதா நாயர், கடந்த 2013ஆம் ஆண்டு போலீஸ் காவலில் இருந்தபோது 23 பக்க கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில், உம்மன் சாண்டி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்ததாக மலையாள செய்தி ஊடகம் ஒன்றில் அண்மையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.