ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆந்திரா பிரிக்கப்பட்டதில் அவசரம்: நரேந்திர மோடி

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியதில் முந்தைய அரசு அவசரம் காட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:01 am

IANS

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியதில் முந்தைய அரசு அவசரம் காட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

அமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட சமயத்தில் நடந்த வன்முறைகளில், உயிரை இழந்தவர்களும், வீடுகள், வாகனங்களை இழந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆந்திரா மற்றும் தெலங்கானா பிரிப்பு எவ்வித ஏற்பாடுகளும் இன்றி, மிக அவசரமாக நடந்து முடிந்துள்ளது. மாநிலத்தைப் பிரித்தபோது ஏற்பட்ட சேதங்கள் இன்னமும் எனக்கு வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

மேலும், பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிகழ்ந்த பல விஷயங்கள் இன்னமும் நமக்கு கவலை அளிப்பதாக இருக்கும். அதுபோலத்தான், முந்தைய அரசும் செய்த காரியங்களும். ஆந்திரா - தெலங்கானா இடையே எப்போதும் ஒரு பதற்றம் இருக்கிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.