டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ராகுல் காந்தி குடியுரிமை பிரச்னை: வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்தியின் குடியுரிமை பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:40 am

PTI

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து மற்றும் நீதிபதி அமீதாவ ராய் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவுக்கு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் நம்பகதன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த மனு உள்நோக்கம் கொண்டது என்ற நீதிபதிகள், நாங்களா அலைந்து திரிந்து மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்த விசாரணை நடத்த வேண்டும் என்று வினவினர்.

முன்னதாக இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என வலிறுத்திய சர்மாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தை வாங்கும் போது, இங்கிலாந்து குடிமகன் என குறிப்பிட்டிருந்ததாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்தே இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.