15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தயாநிதி மாறனிடம் விசாரணையைத் துவக்கியது சிபிஐ

பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

News image
Updated On :30 நவம்பர் 2015, 9:07 am

பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, பிஎஸ்என்எல்-ன் 300 உயர்- வேக தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டுக்கு முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தயாநிதி மாறனை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, நவம்பர் 30ம் தேதி முதல் 6 நாட்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மாறனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு இணங்க, தயாநிதி மாறன் இன்று சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.