டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தயாநிதி மாறனிடம் விசாரணையைத் துவக்கியது சிபிஐ

பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:40 am

PTI

பிஎஸ்என்எல் இணைப்பக முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது, பிஎஸ்என்எல்-ன் 300 உயர்- வேக தொலைபேசி இணைப்புகளை தனது வீட்டுக்கு முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தயாநிதி மாறனை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, நவம்பர் 30ம் தேதி முதல் 6 நாட்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணைக்கு ஆஜராகுமாறு மாறனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு இணங்க, தயாநிதி மாறன் இன்று சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.