டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சித்தூர் மேயர் கொலை: முக்கிய குற்றவாளி சரண்

ித்தூர் மேயர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:40 am

PTI

சித்தூர் மேயர் அனுராதாவும் அவரது கணவர் மோகனும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சந்திரசேகர் என்ற சின்ட்டு இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஆந்திரத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சித்தூர் மேயர் அணுராதாவும் அவரது கணவர் மோகனும், அவர்களது அலுவலகத்திலேயே பட்டப் பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை தொடர்பாக 10 பேர் போலீஸில் சரணடைந்துள்ளனர்.

சொந்த குடும்பப் பகை காரணமாகவே இக்கொலை நிகழ்ந்துள்ளது. இக்கொலைக்காக கடந்த 6 மாதங்களாக கொலையாளிகள் திட்டமிட்டுள்ளனர் என போலீஸார் கூறினர்.

இந்நிலையில் இக்கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் சித்தூரில் உள்ள நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்

சந்திரசேகரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, நீதிமன்றத்தில் விரைவில் மனுதாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.