வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

350 கி.மீ. தூரம் வரை தாக்கும் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்ட பிரித்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2015, 9:36 am

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்ட பிரித்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிஸா மாநிலத்தின், பலாசூர் மாவட்டத்தின், சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் இச்சோதனை நடைபெற்றது.

சுமார் 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகணை, 500 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லும் வலிமையுடையது.

கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை, திட மற்றும் திரவ எரிபொருளால் இயங்கக்கூடியது. மேலும், அணு மற்றும் வழக்கமான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.

சோதனையின் போது பிரித்வி-2 ஏவுகணையின் செயல்பாடுகள், ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ராடார்கள், ராடார்கள், மின் ஆப்டிகல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தொலைத் தொடர்பு நிலையங்களால் கண்காணிக்கப்பட்டது என டி.ஆர்.டி.ஓ. அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.