பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

350 கி.மீ. தூரம் வரை தாக்கும் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்ட பிரித்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

IANS

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்ட்ட பிரித்வி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிஸா மாநிலத்தின், பலாசூர் மாவட்டத்தின், சந்திப்பூரில் உள்ள சோதனை மையத்தில் இச்சோதனை நடைபெற்றது.

சுமார் 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் நடத்தும் இந்த ஏவுகணை, 500 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லும் வலிமையுடையது.

கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்ட பிரித்வி-2 ஏவுகணை, திட மற்றும் திரவ எரிபொருளால் இயங்கக்கூடியது. மேலும், அணு மற்றும் வழக்கமான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியது.

சோதனையின் போது பிரித்வி-2 ஏவுகணையின் செயல்பாடுகள், ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ராடார்கள், ராடார்கள், மின் ஆப்டிகல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தொலைத் தொடர்பு நிலையங்களால் கண்காணிக்கப்பட்டது என டி.ஆர்.டி.ஓ. அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.