வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சகிப்பின்மை விவகாரம் குறித்து விவாதிக்க தயார்: வெங்கய்ய நாயுடு

அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்த எத்தகைய விவாதத்குக்கும் அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

News image
Updated On :25 நவம்பர் 2015, 9:23 am

அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்த எத்தகைய விவாதத்குக்கும் அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், அனைத்து கட்சி கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, சகிப்பின்மை விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு அரசு தயாராகவே இருப்பதாக கூறினார்.

நாட்டில் சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள்பட்டது. எனினும், எதிர் கட்சிகள் விரும்பினால் அரசு சகிப்பின்மை குறித்து விவாதம் நடத்தும் என்றார் நாயுடு.

நாளை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில், சகிப்பின்மை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.