ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மோடியின் லண்டன் பயணம்: தமிழகத்தில் 4,200 மெகா வாட் மின் உற்பத்திக்கு ஒப்பந்தம்

மோடி லண்டன் சென்றுள்ள நிலையில், பிரிட்டனைச் சேர்ந்த ஒ.பி.ஜி. நிறுவனம் தமிழகத்தில் 4,200 மெகா வாட் மின் உற்பத்தி நிலையும் அமைக்க ஒப்பந்த்தில் கையெழுத்திட்டுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2015, 5:31 am

மோடி மூன்றுநாள் பயணமாக லண்டன் சென்றுள்ள நிலையில் 4.4 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஒ.பி.ஜி. நிறுவனம் தமிழகத்தில் அமைக்கவுள்ள 4,200 மெகா வார்ட் மின் உற்பத்தி நிலையமும் அடங்கும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக நேற்று லண்டன் சென்று சேர்ந்தார். அங்கு இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் உரையாற்றினார்.

பின்னர் மோடிக்கும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இடையே 24 வகையான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இங்கிலாந்தைச் சேர்ந்த மெர்லின் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் புதுதில்லியில் அமைக்கவிருக்கும் மெழுகு அருங்காட்சியகமும் ஒன்றாகும். வரும் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்படும்.

மேலும்,  வோடபோஃன் தொலைதொடர்பு நிறுவனம் மோடியின் கனவுத் திட்டங்களான `டிஜிட்டல் இந்தியா 'மற்றும் `மேக் இன் இந்தியா'ஆகியவற்றில் 1.4 மில்லிடன் டாலர் முதலீடு செய்கிறது.

சோலார் மின் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஐரோப்பாவின் லைட்சோர்ஸ் நிறுவனம், இந்திய நிறுவனத்துடன் இணைந்து 3 ஜிகா வார்ட் மின் உற்பத்தி செய்வதற்கான மின் நிலையங்களை அமைக்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்த ஒ.பி.ஜி. மின் நிறுவனம் சார்பில், தமிழகத்தில் 4,200 மெகா வார்ட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் நிலையம் அமைக்கப்படுகிறது.

மேலும், இந்தியாவின் இந்தூர், புனே, அமராவதி நகரங்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் இங்கிலாந்து வழங்கும் என இரு பிரதமர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.