மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நிதீஷ் பதவியேற்பு விழா: சோனியா, கேஜரிவால், மம்தா பங்கேற்பு

பிகார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிதீஷ்குமார் முதல்வராக பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

News image
Updated On :12 நவம்பர் 2015, 8:39 am

பிகார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிதீஷ்குமார்  முதல்வராக பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரணியில் இயங்குவதற்கான தொடக்கப் புள்ளியாக இந்நிகழ்வு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஐந்துகட்டமாக நடைபெற்ற பிகார் பேரவைத் தேர்தலில் நிதீஷ், லாலு, காங்கிரஸ் கூட்டணி 178 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து கூட்டணி சார்பில் நிதீஷ்குமார் வரும் 20 ஆம் தேதி பதவியேற்கிறார்.

இந்நிகழ்சியில் ஆளும் பாரதீய ஜனதாவ எதிர்க்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவர் ஆகியோர் முக்கிய விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும், முன்னாள் பிரதமர் தேவே கௌட, ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி ஆகியோரும் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சியை எதிர்க்கும் அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் இந்த பதவியேற்பு விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக ஐக்கிய ஜனதா தள ஊடக தொடர்பாளர் அஜய் அலோக் கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ள பாஜகவை எதிர்த்து அனைத்து எதிர்கட்சிகளும் தற்போது ஒன்றாக அணி வகுத்திருப்பது, இந்திய அரசியலில் ஒரு புதிய தொடக்கமாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.