கடந்த 20 ஆண்டுகளாக வங்கதேசத்தில் இருந்த முக்கிய உல்ஃபா தலைவர் அனுப் செட்டீயா இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இயங்கி வரும் தடைசெய்யப்பட்ட உல்ஃபா இயக்கத்தின் ஆரம்பகால பொதுச் செயலராக இருந்தவர் செட்டீயா (48). இவரது இயற்பெயர் கோலப் பரூரா.
இந்தியாவில் கொலை, கடத்தல், வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்ட செட்டீயா கடந்த 20 ஆண்டுகளாக வங்க தேசத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
அவரை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் மத்திய அரசு வலியுறுத்தி வந்த நிலையில் இன்று செட்டீயா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் எடுத்த நடவடிக்கையயால் இது சாத்தியமாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வங்கதேசத்தில் இடமில்லை என்ற தற்போதைய ஆட்சியாளர் ஷேக் ஹசினாவின் தீர்மானத்தின்படி செட்டீயா இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தின் இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


