இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் லண்டனில் பயின்றபோது தங்கியிருந்த வீட்டை வாங்குவதற்காக மஹராஷ்டிரர அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மேற்கொண்ட பயணத்துக்காக ரூ. 25 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தகவல் ஆர்வலர் அணில் கல்காலி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வடிவமைப்பாளரான சட்டமேதை டாக்டர் அம்பேத்கர், கடந்த 1921-22 ஆண்டுகளில் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அப்போது அவர் கிங் ஹென்றி சாலையில் உள்ள ஒரு மூன்று மாடி வீட்டில் தங்கியிருந்ததார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், அந்த வீட்டை விலைக்கு வாங்குவது என மஹாராஷ்டிர அரசு முடிவு செய்தது.
இதுகுறித்த விவரங்களை அனில் கல்காலி கேட்டபோது, அந்த வீட்டை வாங்குவதற்காக சமூகநலத் துறை அமைச்சர்கள் ராஜ்குமார் படோலி, திலீப் காம்ளே, செயலர் உஜ்வால் உகே ஆகியோர் லண்டன் சென்றதற்காக அரசு சார்பில் ரூ. 25.45 லட்சம் செலவு செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும், 2050 சதுர அடி கொண்ட அந்த கட்டடத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்றே தெரியவில்லை என்றும் சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. அந்த வீட்டை வாங்குவதற்கு ரூ. 40 கோடி ஒதுக்கிய நிலையில், கடைசியாக ரூ. 32 கோடியில் அந்த வீடு வாங்கப்பட்டுள்ளது.
லண்டன் செல்லும் பிரதமர் மோடி இந்த வீட்டை திறந்து வைக்கவிருக்கிறார். அவருடன் முதல்வர் பட்னாவீஸும் செல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


