மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அம்பேத்கர் இல்லம்: லண்டனில் மஹாராஷ்டிரா அமைச்சர்கள், அதிகாரிகள் ரூ. 25 லட்சம் செலவு

இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் லண்டனில் பயின்றபோது தங்கியிருந்த வீட்டை வாங்குவதற்காக மஹராஷ்டிரர அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மேற்கொண்ட பயணத்துக்காக ரூ. 25 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2015, 12:48 pm

இந்தியாவின் சட்ட மேதை அம்பேத்கர் லண்டனில் பயின்றபோது தங்கியிருந்த வீட்டை வாங்குவதற்காக மஹராஷ்டிரர  அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மேற்கொண்ட பயணத்துக்காக ரூ. 25 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த தகவல் ஆர்வலர் அணில் கல்காலி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வடிவமைப்பாளரான சட்டமேதை டாக்டர் அம்பேத்கர், கடந்த 1921-22 ஆண்டுகளில் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கிங் ஹென்றி சாலையில் உள்ள ஒரு மூன்று மாடி வீட்டில் தங்கியிருந்ததார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம், அந்த வீட்டை விலைக்கு வாங்குவது என மஹாராஷ்டிர அரசு முடிவு செய்தது.

இதுகுறித்த விவரங்களை அனில் கல்காலி கேட்டபோது, அந்த வீட்டை வாங்குவதற்காக சமூகநலத் துறை அமைச்சர்கள் ராஜ்குமார் படோலி, திலீப் காம்ளே, செயலர் உஜ்வால் உகே ஆகியோர் லண்டன் சென்றதற்காக அரசு சார்பில் ரூ. 25.45 லட்சம்  செலவு செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும், 2050 சதுர அடி கொண்ட அந்த கட்டடத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்றே தெரியவில்லை என்றும் சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. அந்த வீட்டை வாங்குவதற்கு ரூ. 40 கோடி ஒதுக்கிய நிலையில், கடைசியாக ரூ. 32 கோடியில் அந்த வீடு வாங்கப்பட்டுள்ளது.

லண்டன் செல்லும் பிரதமர் மோடி இந்த வீட்டை திறந்து வைக்கவிருக்கிறார். அவருடன் முதல்வர் பட்னாவீஸும் செல்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.