ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

இந்திய நிறுவனங்களுடன் இணைந்துவளர்ச்சிக்கு உதவி: மைக்ரோசாப்ட் அறிவிப்பு

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய திட்டங்கள் மற்றும் சாதனங்கள் மூலம் இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என அறிவித்துள்ளது.

News image
Updated On :5 நவம்பர் 2015, 9:59 am

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய திட்டங்கள் மற்றும் சாதனங்கள் மூலம் இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் என அறிவித்துள்ளது.

இந்தியாவின், ஜஸ்ட் டயல், பேடிஎம், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுடன் மைக்ரோசாப் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகன், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் முன்னேற்றத்துக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் துணை நிற்கும் என அதன் புதிய தலைவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்திய நாதல்ல கூறினார்.

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் கிளவுட், சர்பேஸ் புரோ 4 ஆகியவற்றை பயன்படுத்தும் இந்தியர்கள் புதிய வளர்ச்சியையும் உலக அளவிலான தரத்தையும் பெறுவார் என்றார் நாதல்ல.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பாஸ்கர் ப்ராமனிக், கிளவுட் மற்றும் மொபைல் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் ஏற்கெனவே புதிய மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிபுத்திசாலிகளான இந்தியர்களின் கைகளில் அளிக்கப்படும் தொழில்நுட்பங்கள் பல மாயமந்திரங்களை உருவாக்கும் என்றார் பாஸ்கர்.

மேலும், மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருக்கும் ரூ. 80 லட்சம் செலவில் நிர்மாணித்துள்ள அசுர் தொழில்நுட்ப வசதியை கொண்டு புதிதாக அமைக்கப்பட்டும் 50 ஸ்மார்ட் நகரங்கள் நவீன தொழில்நுட்ப வசதியை பெறும். புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பெற விண்ணப்பிக்கலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.