தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விபத்தில் இறந்த ஏர் இந்தியா ஊழியரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் மற்றும் வேலை அறிவிப்பு

மும்பையில் நேற்று நடைபெற்ற எதிர்பாரத விபத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என

News image
Updated On :17 டிசம்பர் 2015, 10:53 am

மும்பையில் நேற்று நடைபெற்ற எதிர்பாரத விபத்தில் இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என ஏர் இந்தியா தலைவர் அஸ்வினி லோஹானி தெரிவித்தார்.

இறந்துபோன ஊழியர் ரவி சுப்பிரமணியனின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும். மேலும், காலை 11 மணிக்கு அனைத்து ஏர் இந்தியா அலுவலகத்திலும் சுப்பிரமணியன் மறைவுக்கு இரண்டு நிமிஷம் மௌன அஞ்சலி செலுத்தப்படும்.

விபத்து குறித்து கருத்து தெரிவித்த அஸ்வினி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏற்கெனவே விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது.

தகவல் தொடர்பில் ஏற்பட்ட இடைவெளி காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்வதற்கு ஏர் இந்தியா விமானம்  ஏ-619 நேற்று இரவு தயார் நிலையில் இருந்தது.

விமான தொழில்நுட்ப ஊழியர் என்ஜின் அருகே பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது துணை விமானி என்ஜினை இயக்கியதால் அந்த ஊழியர் என்ஜினுக்குள் இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விமானம் புறப்படும்போது அதனை பின்னுக்குத் தள்ளி இயக்க முயன்றபோது, சிக்னலை தவறான வகையில் புரிந்துகொண்டு என்ஜினை இயக்கியதால் அந்த சமயத்தில் என்ஜினை சரிப்பார்த்துக் கொண்டிருந்த ஊழியர் உள்ளே இழுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.