தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நாடு முழுவதும் 426 நீதிபதி பதவிகள் காலி: 12 கூடுதல் நீதிபதிகள் பதவி நீட்டிப்பு

நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 426 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், மூன்று உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 12 கூடுதல் நீதிபதிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :17 டிசம்பர் 2015, 2:55 pm

நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 426 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், மூன்று உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 12 கூடுதல் நீதிபதிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால் தற்போதைக்கு புதிய நீதிபதிகள் நியமனம் ஏதும் இல்லாத நிலையில், மூன்று உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் 12 கூடுதல் நீதிபதிகளின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆணைப் பிறப்பித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக ஆந்திர பிரதேசம்-தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் 10 நீதிபதிகளுக்கும், ஜார்கண்ட் மற்றும் கேரள உயர் நீதிமன்றத்தில் தலா ஒரு நீதிபதிக்கும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 1029 நீதிபதிகளுக்குப் பதில் தற்போது 603 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 426 காலி இடங்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.