ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

புகைப்படம் காட்டும் "புதுவை'யின் பன்முகம்!

புதுதில்லி, மே 4: ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டிய விஷயத்தைக் கூட ஒரு புகைப்படம் வெளிப்படுத்திவிடும் என்பார்கள். தில்லி லோதி எஸ்டேட்டில் இந்திய, பிரெஞ்சு கலாசார மையத்தில் அலியான்ஸ் பிராங்கைஸ் கட்டட அரங

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:07 am

புதுதில்லி, மே 4: ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டிய விஷயத்தைக் கூட ஒரு புகைப்படம் வெளிப்படுத்திவிடும் என்பார்கள்.

தில்லி லோதி எஸ்டேட்டில் இந்திய, பிரெஞ்சு கலாசார மையத்தில் அலியான்ஸ் பிராங்கைஸ் கட்டட அரங்கில் நடைபெற்றுவரும் புகைப்படக் கண்காட்சி அதற்கு சான்றாக உள்ளது.

ஆம், "பாண்டிச்சேரி' என்னும் புதுச்சேரியின் பழமையான கலாசாரம், பாரம்பரியத்தை இயல்பான காட்சிகளுடன் வெளிப்படுத்துகிறது இந்தக் கண்காட்சி. பிரெஞ்சு மக்கள் வாழ்ந்து தங்களது கலாசாரத்தை விட்டுச் சென்ற புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், பல்வேறு பிரெஞ்சு நிறுவனங்கள் உள்ளன.

இன்னமும் பிரெஞ்சு மொழியின் சுவாசம் வீசும் இடமாக புதுச்சேரி உள்ளது. ஏனாம், மாஹே, காரைக்கால் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி யூனியன் பிரதேசம்.

மே 20-ம் தேதி வரை...

அதன் சிறப்பு அம்சங்களை எடுத்துரைக்கும் வகையில் பல அரிய புகைப்படங்களைக் கொண்ட இக்கண்காட்சி, காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை, மே 20-ம் தேதி முடிய நடைபெறுகிறது. தஸ்வீர் நிறுவனமும், அலியான்ஸ் பிராங்கைஸ் நிறுவனமும் இணைந்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்த செபாஸ்தியான் கோர்ட்ஸ் என்ற கலைஞரின் கை வண்ணத்தில் உருவான புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.