சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உடலுக்கு வலுவைக் கொடுக்கும் அற்புதமான ஆரோக்கியக் கஞ்சி

முதலில் சாமை அரிசி, உளுந்து, பாசிப் பருப்பு மூன்றையும் வெறும் வாணலியில் போட்டு வறுத்து

News image
அரசாணிக்காய் தேங்காய்ப் பால் சாமைக் கஞ்சி
Updated On :31 ஜனவரி 2024, 1:05 pm

கோவை பாலா

தேவையான பொருட்கள்

சாமை அரிசி -  100  கிராம்
அரசாணிக்காய்.    -  100 கிராம்
தேங்காய்ப் பால்.   -  300 மி.லி
உளுந்து.                 -   50  கிராம்
பாசிப் பருப்பு.        -  20 கிராம்
பனைவெல்லம்.   -  100 கிராம்
சுக்கு, ஏலக்காய்ப் பொடி - ஒரு தேக்கரண்டி
தேங்காய்த் துருவல -  ஒரு கைப்பிடி                                    
                                
செய்முறை
 

  • முதலில் சாமை அரிசி, உளுந்து, பாசிப் பருப்பு மூன்றையும் வெறும் வாணலியில் போட்டு வறுத்து ரவை போல் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • அரசாணிக்காயை தோலோடு துருவி மிக்ஸியில்  போட்டு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும்.
  • பனை வெல்லத்தை கரைத்து கரைசலாக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வறுத்து பொடித்துள்ள சாமை அரிசியைப் போட்டு அதில் 200 மி.லி தேங்காய்ப் பாலை ஊற்றி மேலும் அதில் 150 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு குழையும் படி வேக வைக்கவும்.
  • சாமை அரிசி நன்கு வெந்தவுடன் அதனை நன்கு மசித்து  அதில்  அரைத்து வைத்துள்ள அரசாணிக்காய் ஜூஸ் , மீதியுள்ள தேங்காய்ப் பால் மற்றும் பனைவெல்லக் கரைசல், சுக்கு, ஏலக்காய்ப் பொடி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதி  வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இந்தக் கஞ்சியை சூடாக இருக்கும்பொழுது மிக அருமையாக இருக்கும்.

பயன்கள்

இந்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுக்கும் ஆரோக்கியக் கஞ்சி.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.