சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான சுவையான கஞ்சி

இந்த கஞ்சியை  சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சுவையான கஞ்சி.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:35 am

கோவை பாலா

பனிவரகு வெண்டைக்காய் கஞ்சி

தேவையான பொருட்கள்
 
பனிவரகு - 100 கிராம்
கேரட் - 15 கிராம்
இளம் பிஞ்சு வெண்டைக்காய் -  5
மிளகுத் தூள் - 5 கிராம்
தேங்காய்ப் பால் - 100 மி.லி
எண்ணெய் - தேவையான அளவு, 
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டுப் பல் - 3 பல்

செய்முறை
 

  • கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வெண்டைக்காயை நன்றாக கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
  • வெண்டைக்காய் மற்றும் கேரட்டை நீராவியில் வேக வைத்துக் கொள்ளவும்
  • பனிவரகு அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில்  கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பூண்டுப் பல் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  • பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதிக்கும் பொழுது அதில் பனிவரகு அரிசி சேர்த்து கஞ்சி பதத்தில் வந்தவுடன் நீராவியில் வேக வைத்துள்ள கேரட் மற்றும் வெண்டைக்காயை சேர்த்து கலக்கி இறக்கி கொள்ளவும்.
  • அதில் தேங்காய்ப் பால் மற்றும் மிளகுத் தூளைச் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

பயன்கள்
 
இந்த கஞ்சியை  சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவரும் உண்ணுவதற்கு உகந்த சுவையான கஞ்சி.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.