வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உறுப்பு மாற்றம்: 50 ஆயிரம் இதயம் தேவைப்படும் நிலையில் 15 மட்டுமே கிடைக்கிறது

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில் குறைந்த அளவிலான உறுப்புகளே கிடைக்கின்றன.

News image
Updated On :11 டிசம்பர் 2015, 9:27 am

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேவை அதிகமாக இருக்கும் நிலையில் குறைந்த அளவிலான உறுப்புகளே கிடைக்கின்றன. ஆண்டுக்கு 2 லட்சம் கிட்னி தேவைப்படும் நிலையில் 6 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நாடா கூறினார்.

மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேர விவாவத்தின் போது இதை தெரிவித்த அமைச்சர், ஆண்டுக்கு 30,000 நுரையிரல் தேவைப்படும் நிலையில் 1,500 மட்டுமே கிடைக்கிறது.

இதேபோன்று இதயத்தை பொறுத்தவரையில் 50 ஆயிரத்துக்குப் பதில் 15 மட்டுமே கிடைக்கிறது என்றார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேவைக்கும் தற்போது கிடைப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.

இறக்கும் தருவாயில் உள்ள நபர்களிடமிருந்து நல்ல நிலையில் உள்ள உறுப்புகளை தானமாக பெறுவதற்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார் அமைச்சர்.

உறுப்பு தானத்தை மேம்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையே ஓர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

உறுப்பு தானம் குறித்த ஒருங்கிணைப்பாளர்களை மருத்துவமனைகளில் நியமிப்பதற்காக, தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

மண்டல அளவிலான உறுப்பு மாற்று மையங்களை நிறுவுவதற்காக தமிழ்நாடு, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், சண்டீகர் மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ள என்றார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.