ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இரவு 1 மணி வரை மதுக்கடைகள் திறப்பு: இங்கல்ல ஒடிசாவில்!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகளைத் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 டிசம்பர் 2019, 9:42 am

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகளைத் திறந்து வைக்க திங்கள்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில மது விற்பனைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

புவனேசுவரம், கட்டாக் மற்றும் புரி ஆகிய நகரங்களில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டிச. 31-ஆம் தேதி நள்ளிரவு 1 மணி வரை இந்தியத் தயாரிப்பு அன்னிய வகை மதுபானங்களை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு 1 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில அரசின் 2008-ஆம் ஆண்டு மதுவிற்பனை விதி எண் 93-ன் அடிப்படையில், பொதுமக்களின் விருப்பத்திற்காக மதுக்கடைகளைத் திறந்து வைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.