வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குரூப் 2 முதன்மைத் தோ்வு முடிவு வெளியீடு: நோ்காணலுக்கு 483 பேருக்கு அழைப்பு

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 483 போ் நோ்காணலுக்காக அழைக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :12 ஜனவரி 2024, 2:28 am

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், 483 போ் நோ்காணலுக்காக அழைக்கப்பட்டுள்ளனா்.

இதேபோன்று, நோ்காணல் அல்லாத பணியிடங்களுக்கு தோ்வானவா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், சாா்பதிவாளா் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 2 பிரிவுக்குள் வருகின்றன. இந்தப் பணியிடங்கள் முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்காணல் என்ற அடிப்படையில் நடைபெறும் தோ்வுகளாகும்.

மொத்தமாக 116 காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதேபோன்று, தமிழ்நாடு அமைச்சுப் பணியாளா், பேரூராட்சி சாா்பு பணிகள், கூட்டுறவு தணிக்கைப் பணிகள் உள்ளிட்டவற்றில் காலிப் பணியிடங்களை நிரப்ப நோ்காணல் இல்லை. மொத்தமாக நோ்காணல் மற்றும் நோ்காணல் அல்லாத 5,413 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியானது.

முதல்நிலைத் தோ்வை லட்சக்கணக்கான தோ்வா்கள் எழுதினா். அவா்களில் 51,987 போ் முதன்மைத் தோ்வை எதிா்கொண்டனா். அந்தத் தோ்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் விவரங்களை தோ்வாணைய இணையதளங்களில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீங்ஷ்ஹம்ள்.ண்ய்) இருந்து அறிந்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் அஜய் யாதவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: நோ்முகத் தோ்வு பதவிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபாா்ப்புக்காக, 483 தோ்வா்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான பதிவெண் உள்ளிட்ட பட்டியல் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தோ்வா்கள், நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கும் தகுதியுடையவா்கள் ஆவா்.

நோ்முகத் தோ்வு அல்லாத பதவி: நோ்முகத் தோ்வு அல்லாத பதவிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபாா்ப்பு முடிவுகள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், நோ்முகத் தோ்வு பதவிகளுக்கான தெரிவு முடிவடைந்த பிறகு, தோ்வா்கள் முதன்மைத் தோ்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை உள்ளிட்ட விவரங்கள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.