ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 1083 காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய அறிபிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பிபவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக மார்ச் 4 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த பட்டியல் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிவை வைரதொழில் அலுவலர் உள்ளிட்ட 1083 காலி பணியிடங்கைள நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுகளுக்கு இன்று முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் பணிமேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 794 காலியிடங்கள், தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் சார்நிலைப் பணியில் இளநிலை வரைதொழில் அலுவலர் 236 காலியிடங்கள், இளநிலை வரைதொழில் அலுவலர் பொதுப்பணித் துறையில் 18 காலியிடங்கள், தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் வரைவாளர் நிலை-3 நகர் ஊரமைப்புத் துறையில் 10 காலியிடங்கள்அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.35,400 - 1,30,400 சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன தொழில்நுட்ப சார்நிலைப் பணியில் முதலாள்.நிலை-2 தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத் துறையில் 25 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு சம்பளம் மாதம் ரூ.19,500 - 71,900 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டயம், பட்டம் முடித்தவர்கள், மெக்கானிக்கல் பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
மேலும், இந்த தேர்வுகளுக்காக மார்ச் 4 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கைடசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், இனிய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வைர வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. எழுத்துத் தேர்வு 27.05.2023 ஆம் தேதி காலை, மதியம் என இரண்டு என நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
Related Article
தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பித்துவிட்டீர்களா? எல்ஐசியில் ஏஏஓ வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் மேலான்மை டிரெய்னி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான தேர்வு பிப்.3ல் தொடக்கம்!
ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

