பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

விண்ணப்பிக்கலாம் வாங்க... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் கும்பகோணம், விழுப்புரம், சேலம், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர், சென்னை மாவட்ட பணிமனைகளில் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு 

News image
Updated On :2 டிசம்பர் 2022, 8:35 am


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் கும்பகோணம், விழுப்புரம், சேலம், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர், சென்னை மாவட்ட பணிமனைகளில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: பட்டதாரிகளுக்கான தொழில்பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 169 

உதவித்தொகை: மாதம் ரூ.9,000

பணி: டிப்ளமோ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 177

உதவித்தொகை: மாதம் ரூ.7,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 2020, 2021, 2022 ஆம் கல்வியாண்டுகளில் முடித்தவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத்தேர்வு 2013 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். நேர்முகத்தேர்வுக்கு வரும்போது தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் தங்களது தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தில் வழங்கப்படும்  Unique Enrolment Number பயன்படுத்தி அதே இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முன்பதிவு செய்யவதற்கான கடைசி நாள்: 5.12.2022

தொழில்பழகுநர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.12.2022

மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.