சென்னையில் உள்ள கலாஷேத்ரா நாட்டியப் பள்ளியின்கீழ் செயல்படும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
பணி: Faculties
காலியிடங்கள்: 9
தகுதி: தமிழ் பாடப்பிரிவிற்கு-தமிழ் பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதர பாடப்பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட இசை, நடன பாடப்பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : தமிழாசிரியர் பணிக்கு ரூ.15,000 - ரூ.20,000. இதர பணிகளுக்கு ரூ.20,000 - ரூ.36,000
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 60 வயதிற்குள் இருக்க
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு பற்றிய விபரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.kalakshetra.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Kalakshetra Foundation, Tiruvanmiyur, Chennai - 600 041.
Summary
Applications invited for the various faculty position on contract basis...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










