2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மத்திய அரசில் 3,131 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி..?

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புப்புவதற்கான ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2025 எழுத்துத் தேர்வு

News image
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி)
Updated On :29 ஜூன் 2025, 10:49 am

DIN

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புப்புவதற்கான ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2025 எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து ஜூலை 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து விவரங்களை பார்ப்போம்:

பணி: Lower Division Clerk (LDC), Secretariat Assistant (JSA)

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

பணி: Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

பணி: Data Entry Operator, Grade ‘A’

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

காலியிடங்கள் : 3,131

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

அதாவது 2 ஜனவரி 1999-க்கு முன்போ 1 ஜனவரி 2008-க்குப் பின்போ பிறந்தவர்களாக இருக்கக் கூடாது. அரசு அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படுமும் முறை: இரண்டு கட்ட கணினி வழித் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மற்றும் வேலூர்

விண்ணப்பக் கட்டணம்: பெண்கள், எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதல்கட்டத் தேர்வு நடைபெறும் தேதி: 8.9.2025 18.9.2025, இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெறும் தேதி பிப்ரவரி-மார்ச் (2026)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.7.2025

மேலும் விவரங்கள் அறியங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.