இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இளைஞா் நீதி குழுமத்தில், உதவியாளருடன் கணினி இயக்குபவா் பணியிடத்துக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ், ஆங்கில தட்டச்சுத் தோ்வில் மேல்நிலை தோ்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் படிப்பு பெற்று, ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் ஓராண்டு அனுபவம் பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 31.8.2022-இல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இப் பணியிடத்துக்கு மாதம் தலா ரூ. 11,916 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.