டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இன்றைய வேலைவாய்ப்பு செய்தி என்ன தெரியுமா? 

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் காலியாக உள்ள 14 உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர்,

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:20 pm

ஆர். வெங்கடேசன்


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் காலியாக உள்ள 14 உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், இரவுக்காவலர் போன்ற இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. 

நிறுவனம்:    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை 

பணியிடம்: நாகப்பட்டினம்

மொத்த காலியிடங்கள்: 14

பணி: அலுவலக உதவியாளர் - 08
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி:  எழுத்தர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: ஈப்பு ஓட்டுநர் - 02
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: இரவுக்காவலர் - 03
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு:  குறைந்தபட்ச வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக 02.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2019/11/2019111987.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.12.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.