தமிழகத்தில் 453 எம்டிஎஸ் பணிக்கு 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்), பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1.8.2017 தேதியின்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியில் சேருவோருக்கு மாத ஊதியமாக ரூ.5,200 முதல் ரூ. 20,200, 40,500 வரை வழங்கப்படும்.
பணியின் பெயர்: மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (Multi Tasking Staff (MTS) Non Technical)
காலிப்பணியிட விவரம்: தமிழகம் - 453; பிற மாநிலங்கள்- 7847.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒ.பி.சி. பிரிவினர் ரூ. 100 செலுத்த வேண்டும். மற்றவர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.1.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 16.04.2017, 30.04.2017, 07.05.2017
மேலும் விவரங்களுக்கு: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/mtsfinalnotice301216.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...