நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களா நீங்கள்..? இதோ 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

நாடு முழுவதும் 137 முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான பள்ளிகளில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:19 pm

ஆர். வெங்கடேசன்

நாடு முழுவதும் 137 முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான பள்ளிகளில் (Army Public School) காலியாக உள்ள 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.B/45706/CSB-2017/AWES

மொத்த காலியிடங்கள்: 8000

பணி: Post Graduate Teachers (PGT)
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Trained Graduate Teachers (TGT)
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்து CTET அல்லது TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Primary Teachers (PRT)
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள், ஆசிரியர் கல்வி பயிற்சியில் டிப்ளமோ (D.T.Ed) முடித்து CTET அல்லது TNTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். 5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் உள்ளவர்கள் 57க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மூன்று கட்ட தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்கட்ட தேர்வில் கொள்குறிவகை கேள்விகள் கொண்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றிபெற்றவர்களுக்கு இரண்டான் கட்ட தேர்வன நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் மூன்றாம் கட்ட தேர்வான கற்பிக்கும் திறன் மற்றும் கணினி கையாளும் திறன் சோதிக்கப்பட்டு இறுதியில் தகுதியானவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.aps-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.207
 
தேர்வு மையங்கள்: இந்தியா முழுவதும் 77 நகங்களில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை இரண்டு நகங்களில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 15,17.01.2018 ஆகிய இரு தேதிகளில் நடைபெறுகிறது.  

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 27.01.2018

மேலும் முழுமையான விரிவான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.