ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 41

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:35 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்...

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அடைமொழியால் குறிப்படுபவர் யார் என்ற வினாக்கள் ஒன்று அல்லது இரண்டு இடம்பெற்று வருகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டு பெர்னாட்ஷா யார் என வினா இடம்பெற்று அதற்குரிய விடைகளாக வெவ்வேறு பெயர்களாக நான்கு கொடுத்திருப்பார்கள். அவற்றில் சரியான, அடைமொழிக்குரிய சான்றோரின் பெயரைத் தேர்ந்தெடுத்து விடையளிக்க வேண்டும்.
இதில் சரியான விடைகளைப் போல தோற்றமளிக்கும் விதமாக நான்கு விடைகளையும் கொடுத்திருப்பார்கள். நன்கு யோசித்து வினாவைப் புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டும். இப்படி விடைகளை ஒன்றுக்கு இரண்டு முறை கவனித்து சரியாக விடை அளித்தால் தேர்வில் வெற்றிப்பெறுவது உறுதி.
உதாரணமாக...
தமிழ்நாட்டுப் பெர்னாட்ஷா என மு. வரதராசனார் அவர்களையும், தென்னாட்டு பெர்னாட்ஷா என அறிஞர் அண்ணாவை குறிப்பிடுவோம். இதில் குழப்பமடையாமல் யார் தமிழ்நாட்டு பெர்னாட்ஷா, யார் தென்னாட்டு பெர்னாட்ஷா என சிந்தித்து சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். இதுபோன்ற குழுப்பமான கேள்விகளைப் படித்து தெளிந்து விடையளிக்கப் பழகிக்கொண்டால் டிஎன்பிஎஸ்சி-ஆல் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி கனியை சுவைக்கலாம்.
 
1. தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா
2. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்
3. நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
4. நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
5. தமிழ்நாட்டின் மாப்பசான் - ஜெயகாந்தன்
6. புரட்சி கவிஞர், இயற்கை கவிஞர் - பாரதிதாசன்
7. கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை
8. குழந்தைக் கவிஞர் - அழ. வள்ளியப்பா
9. தொண்டர் சீர்பரவுவார் - சேக்கிழார்
10. கவிச்சக்ரவர்த்தி - கம்பன்
11. விடுதலைக்கவி , தேசியக்கவி - பாரதியார்
12. தமிழ்த்தென்றல் - திரு.வி.க.
13. ஆளுடை நம்பி - சுந்தர்ர்
14. ஆட்சி மொழிக் காவலர் - இராமலிங்கனார்
15. கிருத்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
16. இரா. பி. சேதுபிள்ளை - சொல்லின் செல்வர்
17. மூதறிஞர் - இராஜாஜி
18. பேரறிஞர் - அண்ணா
19. பகுத்தறிவுப் பகலவன் - பெரியார்
20. செக்கிழுத்த செம்மல் - வ.உ.சி.
21. தசாவதானி - செய்குத் தம்பியார்
22. இசைக்குயில் - எம்.எஸ். சுப்புலட்சுமி
23. மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாசர்
24. பாவலர் ஏறு - பெருஞ்சித்தரனார்
25. கல்வியிற் பெரியவர் - கம்பர்
26. சிறுகதை மன்னன் - புதுமைபித்தன்
27. திருவாதவூரார் - மாணிக்க வாசகர்
28. முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ. விசுவநாதம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.