தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 34

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:30 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

1. இந்தியாவில் லோடி பேரரசு முடிவுக்கு வர காரணமான போர் - பானிபட் போர்
2. பானிபட் போர் நடந்த ஆண்டு - 1526
3. பானிபட் போருக்குப்பின் தோன்றிய அரசு - முகலாயப் பேரரசு
4. பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடைபெற்றது - பாபர் - இப்ராஹிம் லோடி
5. நிலங்களைத் தனமாக வழங்கும் முறைக்குப் பெயர் - ஜாகிர் முறை
6. முகமதியர் அல்லாதவர் மேல் விதிக்கப்பட்ட வரி - ஜிஸ்யா வரி
7. சுல்தானிய ஆட்சி முறை என்பது - இந்திய, பாரசீக, துருக்கிய ஆட்சிமுறைகளின் கலவை.
8. சுல்தானுக்கு ஆலோசனை வழங்க எத்தனை அமைச்சர்கள் இருந்தனர் - 4 முதல் 6
9. இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலமாக்கள்
10. சுல்தான்களின் நாடு எவ்வாறு பரிக்கப்பட்டது - மாநிலம்
11. மாநிலத்தின் பொறுப்பாளர் யார் - ராணுவ ஆளுநர்
12. மாநில அளவில் நீதி வழங்கும் பணியைச் செய்தவர் - காஸி
13. சுல்தான்கள் அரசின் முதன்மையான வரி - நில வரி
14. முஸ்லீம்கள் மீது விதிக்கப்பட்ட நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது -  உஷர்
15. இந்துக்களின் மீது விதிக்கப்பட்ட நிலவரி - கிராஜ்
16. சமயவரி எவ்வாறு அழைக்கப்பட்டது - ஜிஸ்யா
17. நீதிவழங்குவதில் அரசருக்கு ஆலோசனை கூறியவர்கள் - காஸிகள்
18. பல கிராமங்களின் தொகுப்பு எவ்வாறு வழங்கப்பட்டது - பர்கானா
19. சுல்தானின் ஆட்சிக் காலம் - 1206 - 1526
20. தில்லி சுல்தானியத்தை ஆண்ட வம்சங்கள் எத்தானை - 5
21. சுல்தானியர்கள் காலத்தில் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தன - 4
22. தில்லி சுல்தான்களின் அரசுக்கு எதிராக உருவான இயக்கம் - பக்தி இயக்கம்
23. பக்தி இயக்கத்தினால் வளர்ந்தது - சூபிசம்
24. ராமனுஜர் காலம் - கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
25. ராமானுஜரின் கொள்கை - விஜிஸ்டாத்துவைதம்
26. முக்தியை அடையும் வழியாக கூறியது - பக்தி
27. ராமனுஜரின் வழித்தோன்றல் - ராமானந்தர்
28. ராமானந்தரின் சீடர் - கபீர் தாசர்
29. இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்ற கிருஷ்ண பக்தர் - வல்லபாச்சாரியர்
30. பக்தி இயக்கத்தின் தலை சிறந்த வித்தகர் - சைதன்யர்
31. ராமனும் ரஹீமும் ஒருவரே என்றவர் - கபீர்
32. சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் - குருநானக்
33. சீக்கியர்களின் புனித நூல் - ஆதிகிரந்தம்
34. பக்தி நெறி பரப்பிய நாமதேவர், ஏகநாதர், துக்காராம் ஆகியோர் எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மஹாராஷ்டிரா
35. ராஜஸ்தானில் ஆடம்பர வாழ்வைத் துறந்து கிருஷ்ணபக்தையானவர் - மீராபாய்
36. சூபிகள் யார் - பாரசீகத்திலிருந்து வந்த இஸ்லாமியத் துறவிகள்.
37. சூபிகளின் பக்திப்பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன - கவாலிகள்
38. ஆஜ்மீரில் வாழ்ந்த புகழ்பெற்ற சூபி துறவி - நிசாமுதீன் அவுலியா
39. சுல்தான்களின் காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய கட்டமைப்புகளின் ஒன்று - பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ்
40. சுல்தான்களின் காலத்தில் தோன்றிய புதிய மொழி - உருது
41. சுலல்தான்களின் காலத்தில் தோன்றிய இசை - இந்துஸ்தானி இசை
42. இந்துஸ்தானி இசையைப் பரப்பியவர்கள் - சூபிகள்
43. குதுப்மினார் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது - சுல்தான்கள்
44. கிதார் என்னும் இசைக் கருவி யார் காலத்தில் பழக்கத்திற்கு வந்தது - சுல்தான்கள்
45. தில்லியில் உள்ள அழகு வாய்ந்த கல்லறையில் யாருடையவை - லோடி வம்சத்தினர்
46. பாமினி அரசைத் தோற்றுவித்தவர் - அலாவுதீன் பாமன்ஷா
47. பாமினி அரசைத் தோற்றுவித்த ஆண்டு - 1347
48. பாமினிப்பேரரசின் தலைநகர் - தக்காணத்திலுள்ள குல்பர்கா
49. பாமினிப் பேரரசு உட்பகுப்பு முறைக்குப் பெயர் - ஜாஹிர்
                                                                                                                                 தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.