2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 29

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:25 pm

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
1. மவுரியப் பேரரசின் முக்கிய வரி - நிலவரி
2. மவுரியர் கால கல் தூண் - சாரநாத் கல்தூண்
3. மவுரியர் கலை வளர்ச்சியினால் எழுந்த ஸ்தூபி - சாஞ்சி ஸ்தூபி
4. மவுரியர் கலையை வெளிப்படுத்தும் குகைக்கோவில் - பராபர் குகைக் கோவில்
5. குஷானர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய காலம் - கி.மு.200 முதல் கி.மு.100
6. குஷானர்களின் இனம் - யூச்சி
7. குஷானர்களின் தலைநகரம் - புருஷபுரம்
8. குஷானர்களின் வீழ்ச்சிக்குப் பின் வந்த பேரரசு - குப்தப் பேரரசு
9. கனிஷ்கர் சார்ந்திருந்த சமயம் - புத்தம்
10. கனிஷ்கர் அரியணை ஏறிய ஆண்டு - கி.பி. 78
11. கனிஷ்கர் சார்ந்திருந்த சமயம் - மகாயான புத்த சமயம்
12. கனிஷ்கர் அவையிலிருந்த புத்த சமய அறிஞர் - அசுவ கோசர்
13. புத்த மதத்தில் மகாயானம் -ஹீனயானம் என இரு பிரிவுகள் தோன்றியது - கனிஷ்கர் காலத்தில்
14. கனிஷ்கர் கட்டிய புத்த சமய மாநாடு - நான்காம் புத்த மாநாடு
15. கனிஷ்கர் காலத்தில் தோன்றிய சிற்பக்கலை - காந்தார சிற்பக்கலை
16. புத்தரைக் கடவுளாக வழிபட்ட சமயம் - மகாயானம்
17. காந்தார சிற்பக்கலை என்பது - இந்திய-கிரேக்க கலை இணைந்தது.
18. முதலாம் சந்திரகுப்தரைத் திருமணம் செய்து கொண்ட இளவரசி - லிச்சாவி நாட்டு இளவரசி
19. சமுத்திர குப்தர் யாருடைய புதல்வர் - முதலாம் சந்திர குப்தர்
20. சமுத்திர குப்தரின் வெற்றியைத் குறிப்பிடும் கல்வெட்டு - அலகாபாத் கல்வெட்டு
21. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் - சமுத்திர குப்தர்
22. விக்கிரமாதித்தர் என அழைக்கப்பட்டவர் - இரண்டாம் சந்திரகுப்தர்
23. இரண்டாண் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்த சீனப் பயணி - பாஹியான்
24. இந்தியாவில் பாஹியான் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார் - 9 ஆண்டுகள்
25. இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்த அறிஞர்கள் - நவரத்தினங்கள்
26. நவரத்தினங்களில் முதன்மையானவர் - காளிதாசர்
27. குப்தர்கள் காலத்தில் அமைந்த குகைகோவில் எங்குள்ளது - உதயகிரி
28. குப்தர்கள் கால கட்டிடக்கலைக்கு நல்லசான்று - தியோகரின் தசாவராக் கோவில்
29. குப்தர்கள் கால ஒவியக் கலைக்குச் சான்று - அஜந்தா குகை ஒவியம்
30. குப்தர் காலத்தில் இருந்த வானியல், கணிதம், ஜோதிடம் ஆகியவற்றின் அறிஞர் - தன்வந்திரி
31. குப்தர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகம் - நாளந்தா பல்கலைக்கழகம்
32. குப்தர்கள் காலத்தில் இருந்த சிறந்த வானியல் அறிஞர் - ஆரியப்பட்டா
33. ரகுவம்சம் என்னும் காவியத்தைப் படைத்தவர் - காளிதாசன்
34. குப்தர்கள் காலம் இயற்றிய வரலாற்றில் - பொற்காலம்
35. வர்த்தமானங்களில் தலை சிறந்தவர் - ஹர்ஷவர்த்தனர்
36. ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்காலம் - கி.பி. 606 முதல் 647 வரை
37. ஹர்ஷவர்த்தினரின் தந்தை - பிரபாகர வர்த்தனர்
38. ஹர்ஷவர்த்தினரின் தமையன் - ராஜ்யவர்த்தனர்
39. ஹர்ஷவர்த்தனரின் சகோதரி - ராஜ்ஸ்ரீ
40. ஹர்ஷவர்த்தனரின் தமையன் ராஜ்யவர்த்தனைத் தந்திரமாகக் கொன்றவன் - தேவகுப்தன்
41. ஹர்ஷவர்த்தனர் அரியணை ஏறும் பொழுது அவருக்க வயது - 16
42. ஹர்ஷர் தம் தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார் - தானேஸ்வரம் - கன்னோசி
43. ஹர்ஷரின் தக்காணப்படையெடுப்பில் அவருடன் போரிட்ட மன்னர் - இரண்டாம் புலிகேசி
44. ராஜ்ஸ்ரீயை மண முடித்தவர் - மவுகாரி மன்னர் கிரகவர்மன்
45. கிரகவர்மனைக் கொன்று ராஜ்ஸ்ரீயைச் சிறைப்பிடித்தவர் - தேவகுப்தன் - சகாங்கன்
46. யுவான்சுவாங்கின்ன பயணக்குறிப்புகளின் பெயர் - சியூக்கி
47. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்
48. தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மச்சக்கரம்
49. நான்காவது பவுத்த மாநாட்டை கட்டியவர் - கனிஷ்கர்
50. ஹர்ஷரைபர் பற்றி அறிய உதவும் நூல் - ஹர்ச சரிதம்

                                                                                                                           தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.