அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலகத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குதகுதியுள்ளவர்கள்


சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குதகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். வயது வரம்பு 30 ஆகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பபடிவங்கள் கிண்டி ஆலந்தூர் சாலையிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
நிபந்தனைக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் வரும் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...