அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தில் பணி

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் தலைமை அலுவலகமான புதுதில்லி மற்றும் கிளை அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:50 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் தலைமை அலுவலகமான புதுதில்லி மற்றும் கிளை அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள 233 இயக்குநர், துணை இயக்குநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:

பணி: Director (Vigilance) - 01
சம்பளம்: ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700.
தகுதி: அகில இந்திய அளவில் மத்திய அரசு அலுவலகங்களில் குருப் ஏ சர்வீசில் 9 ஆண்டுகள் முன்அனுபவம் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கையாளும் விதிமுறைகள் குறித்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Director (Vigilance) - 09
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.
தகுதி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகத்தில் அல்லது மத்திய, மாநில அரசு அலுவலகங்கள்/ யூனியன் பிரதேச அரசு அலுவலகங்களில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Director (Vigilance) - 37
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசுகளில் தொிழலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

பணி: Vigilance Assistant - 40  
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: தொழிலாளர்கள் வருங்காலை வைப்பு நிதி கழகத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

பணி: Deputy Director (Audit) - 09
தகுதி: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் மத்திய அல்லது மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். பி.காம்., படித்திருக்க வேண்டும் மற்றும் அலுவலக தேர்வுகளான எஸ்ஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600.
 
பணி: Assistant Director (Audit) - 13

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி கழகத்தின் மத்திய அல்லது மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருக்க வேண்டும்.

பணி: Assistant Audit Officer - 31
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
தகுதி: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் மத்திய அல்லது மாநிலங்களில் உள்ள கிளை அலுவலகங்களில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை பணி புரிந்திருக்க வேண்டும்.

பணி: Auditor - 55
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகத்தின் மத்திய அல்லது மாநிலங்களில் உள்ள கிளை அலுவலகங்களில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் ஆடிட்டராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

பணி: Programmer - 38
தகுதி: கம்ப்யூட்டர் அப்ளிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளில் முதுகலை பட்டம் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாடத்தில் எம்.டெக்., அல்லது  பி.இ. அல்லது பி.டெக்., மற்றும் எலக்ட்ரானிக் டேட்டா புராசசிங் பணியில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது கம்ப்யூட்டர் அப்பளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது முதுகலை பட்டம் அல்லது பி.இ., மற்றும் எலக்ட்ரானிக் டேட்டா புராசசிங்கில் 4 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் www.epfindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அந்த வடிவமைப்பை கணினியில் தட்டச்சு செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Shri Sanjay Bisht,
Regional Provident Fund Commissioner (HRM),
Bhavishya Nidhi Bhawan,
14,Bhikaji Cama Place,
NEWDELHI- 110 066.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.12.2016.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.epfindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.