வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி: பாஜக

மே. வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி என பாஜக தலைவர் தெரிவித்தது குறித்து...

News image

பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 11:34 am

மேற்கு வங்கத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி என்று பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே. 4 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

இதுகுறித்து பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்ததாவது:

“மே 4 ஆம் தேதி, ஆட்சியிலிருந்து மமதா பானர்ஜி அகற்றப்படுவார். மக்கள் தங்களுடைய முடிவை எடுத்துவிட்டனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு, அச்சமின்றி வாக்களிக்கலாம் என்று கூறி, மக்கள் எல்லா இடங்களிலும் வெளியே வருகிறார்கள்.

பவானிபூரில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி நிச்சயம் வெற்றி பெறுவார். மமதாவை காய்கறிகள் வாங்கவும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கவும், வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யவும் நாம் கட்டாயப்படுத்தியதே நம்முடைய மிகப்பெரிய வெற்றி. இது கங்கோத்ரியைச் சேர்ந்த பாஜக தொண்டர்களின் கனவு.

மேற்கு வங்கத்தின் முந்தைய காலத்தில், காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) க்கும் இடையில் போட்டி நிலவியது. பின்னர், அது காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையேயான போட்டியாக மாறியது.

தற்போது, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கும் இடையேயான போட்டியாக அது உருவெடுத்துள்ளது. இது ஒரு நேரடியானப் போட்டி. எந்த விலை கொடுத்தாவது திரிணமூல் காங்கிரஸை ஆட்சியிலிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பது மக்களின் மனநிலையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

Summary

BJP leader Samik Bhattacharya has stated that the contest in the West Bengal Assembly elections is between the Trinamool Congress and the BJP.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.