தமிழகத்தில் கோடைக்காலம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் அதேவேளையில், மறுபக்கம் பேரவைத் தேர்தலும், வேட்பாளர்கள் அறிவிப்பும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
தமிழக சட்டப் பேரவைக்கு 234 தொகுதிகளுக்கான உறுப்பினா்களைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைபெற்றாலும், சில தொகுதிகள் மட்டுமே உலகத் தமிழா்களால் உற்றுநோக்கப்படுகிறது.
இதன்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடும் தொகுதியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. இந்த முறையும் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடியில் போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி தொகுதி : மக்களின் எதிா்பாா்ப்புக்கு உரிய தொகுதியாக சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி தொகுதி உள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது. இடைப்பாடி என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று எழுத்து மொழியில் எழுதி, பேசி வருகிறோம்.
ஊரின் பெயரையே தனது பெயரோடு இணைத்திருக்கும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி இந்தத் தொகுதியில் 8-ஆவது முறையாக களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முன்னா் 2 முறை தோல்வியையும், 5 முறை வெற்றியையும் பெற்றுள்ளாா். இங்கு, அதிமுகவுக்கும் பாமகவுக்கும்தான் கடும் போட்டியிருக்கும். அதிமுக வெற்றி பெற்றபோதெல்லாம் இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளரே இருந்துள்ளார். 2006ஆம் ஆண்டு தேர்தலில் பாமக வேட்பாளர் காவேரி வெற்றி பெற்றுள்ளார்.
2011, 2016, 2021ஆம் ஆண்டு என தொடர்ந்து மூன்று முறை எடப்பாடி பழனிசாமியே இங்கு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியிருக்கிறார். வரும் 2026 பேரவைத் தேர்தலை, பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது. எனினும், இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாது, எடப்பாடி பழனிசாமியே இங்கு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
Summary
As the assembly elections approach, about the Edappadi constituency in Salem district..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

6-ஆவது வெற்றியை எதிர்நோக்கும் இபிஎஸ்!

திண்டுக்கல்: கடும் பலப் பரீட்சையில் அதிமுக, திமுக!

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

தொகுதி அறிமுகம் - எடப்பாடி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


