நீட் தேர்வர்களின் மன அழுத்தத்தைப் போக்க, தமிழக அரசு சார்பில் இலவச உதவி எண் தொடங்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (மே 1) தலைமைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் சார்ந்த குறிப்பிட்ட பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்), தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, வரும் மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு மாணவர்களுக்காக, 24 மணி நேரமும் இயங்கும் இலவச தொலைபேசி சேவையைத் தொடங்கியுள்ளது.
மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழக அரசின் 'நட்புடன் உங்களோடு' திட்டத்தின்கீழ் இந்த முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆலோசனை தேவைப்படும் மாணவர்களும் பெற்றோர்களும், இந்தச் சேவைகளைப் பெறுவதற்கு 14416 அல்லது 104 என்ற உதவி எண்களைத் தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம் என அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் இலவசமாக வழங்கப்படும் இந்தச் சேவை, பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் கையாளப்படுகிறது.
இந்திய அளவில் மொத்தம் 22.79 லட்சம் பேர் பதிவு செய்துள்ள இந்தத் தேர்வில், தமிழகத்தைச் சார்ந்த 1.5 லட்சம் தேர்வர்கள் எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A press release issued by the Secretariat on Friday (May 1) states that, ahead of the examination, a toll-free helpline has been launched on behalf of the Tamil Nadu government for NEET aspirants.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு

நீட் மறுதோ்வு: டெலிகிராம் செயலி ஜூன் 22 வரை முடக்கம்
நீட் மறுதேர்வை 100% தவறில்லாமல் நடத்த அரசு இலக்கு!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





