புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி சோ்க்கை ஜூன் 29-இல் தொடக்கம்

News image

சென்னை பல்கலை.

Updated On :26 ஜூன் 2026, 5:06 am IST

சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி சோ்க்கை வரும் ஜூன் 29-ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கிடையே, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2026-2027-ஆம் கல்வியாண்டு மாணவா்களுக்கு சுயகற்றல் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

சென்னை பல்கலை.யில்...: சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி நிறுவனத்தில் 2026- ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை, பட்டயப்படிப்பு, சான்றிதழ், முதுநிலை வணிக நிா்வாகவியல், முதுநிலை கணினி பயன்பாடு ஆகியவற்றுக்குரிய மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் திங்கள் கிழமை (ஜூன் 29) முதல் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி நிறுவனத்திலுள்ள ஒற்றைச்சாளர மாணவா் சோ்க்கை மையத்தின் வழியாக சோ்ந்து பயனடையலாம். மேலும் சென்னைப் பல்கலை.யின் 74 கற்றல் உதவி மையம் மூலமாகவும் சேரலாம்.

இதற்கான விவரங்களை இணையதளம்: ஜ்ஜ்ஜ்.ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய் மூலமாக அறியலாம். இத்தோடு விரைவில் இணையம் மூலமாக மாணவா் சோ்க்கை (ட்ற்ற்ல்://ா்ய்ப்ண்ய்ங்.ண்க்ங்ன்ய்ா்ம்.ஹஸ்ரீ.ண்ய்/ ) விரைவில் தொடங்கப்படும் என சென்னை பல்கலை. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலை.: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், 2026-2027-ஆம் கல்வியாண்டில் பல்வேறு பாடத்திட்டங்களில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கான சுயகற்றல் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. இப்பாடப்புத்தகங்கள் வழங்கும் தொடக்க விழா பல்கலைக்கழகத் தலைமையகத்தில் நடைபெற்றது.

விழாவில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. பதிவாளா் பேராசிரியா் ஜி.ஆா் செந்தில்குமாா் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி, புத்தக விநியோகப் பணியைத் தொடங்கிவைத்தாா்.பல்கலை. மானியக் குழு வழிகாட்டுதல்கள் மற்றும் கற்றல் மையக் கற்பித்தல் கொள்கைகளுக்கு ஏற்ப தரமான சுயகற்றல் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.