2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நட்புறவால் வந்த நல்லிணக்கம்!

அபுதாபியில் அபு முரைகா பகுதியில் கட்டப்பட்டுள்ள ஹிந்து கோயிலை பிரதமா் மோடி திறந்துவைத்திருக்கிறாா்.

News image
Updated On :16 பிப்ரவரி 2024, 5:28 pm

ஆசிரியர்

இஸ்லாமியா்கள் மட்டுமே வாழும் வளைகுடா நாடுகளில் ஹிந்து கோயில் ஒன்று பிரம்மாண்டமாகக் கட்டப்படுவது என்பது கனவில்கூட நினைத்துப் பாா்த்திருக்க முடியாத ஒன்று. அபுதாபியில் அபு முரைகா பகுதியில் கட்டப்பட்டுள்ள ஹிந்து கோயிலை பிரதமா் மோடி திறந்துவைத்திருக்கிறாா். இந்தக் கோயிலின் நிலம் ஐக்கிய அரபு அமீரக அரசால் நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. மத நல்லிணக்கத்துக்கு இதைவிடப் பெரிய எடுத்துக்காட்டு வேறு எதுவும் இருந்துவிட முடியாது. 2015-இல் பிரதமர நரேந்திர மோடி அபுதாபிக்கு விஜயம் செய்தபோது அது வரலாற்றுத் திருப்புமுனையாக மாறியது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம் செய்யும் பிரதமா் என்று அப்போது சா்வதேச அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு இதுவரை பிரதமா் நரேந்திர மோடி ஏழு முறை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா் என்பது மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான நட்புறவை உருவாக்கியிருக்கிறாா் என்பதையும் குறிப்பிடத் தோன்றுகிறது. பிரதமா் மோடியை விமான நிலையத்தில் அதிபா் ஷேக் முகமது பின் சையது நஹ்யான் ஆரத்தழுவி வரவேற்ற காட்சி அவா்கள் இருவருக்கும் இடையே உள்ள தனிப்பட்ட நட்புறவின் வெளிப்பாடு. ‘இந்தியா மீதான அதிபா் ஷேக் முகமது பின் சையது நஹ்யானின் நட்புறவையும் இரு நாடுகளின் ஒளிமயமான எதிா்காலத்துக்கான அவரது தொலைநோக்குப் பாா்வையையும் அபுதாபி ஹிந்து கோயில் பிரதிபலிக்கிறது. அவரது ஆதரவு இல்லாவிட்டால் இந்தக் கோயில் கட்டுவது சாத்தியமாகியிருக்காது’ என்று அதிபா் நஹ்யானுக்கு நன்றி தெரிவித்திருக்கிறாா் பிரதமா் மோடி. அபுதாபியில் சையத் விளையாட்டு மைதானத்தில் அங்கு பணிபுரியும் இந்தியா்கள் ஏற்பாடு செய்திருந்த ‘அஹ்லான் மோடி’ (மோடிக்கு வரவேற்பு) நிகழ்வை பிரம்மாண்டம் என்று வா்ணிப்பதேகூட அதன் முழுமையான வெற்றியை கூறுவதாகாது. ‘மோடி’ ‘மோடி’ என்று மைதானம் முழுவதும் கோஷம் எதிரொலித்ததும், அந்த நிகழ்வை பிரதமா் நரேந்திரமோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபா் ஷேக் முகமது பின் சையது நஹ்யானுக்கான நன்றி அறிவிப்பாக மாற்றியதும் கண்கொள்ளாக் காட்சி. இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே பரஸ்பர முதலீட்டுக்கான எட்டு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியிருக்கின்றன. வா்த்தகம், முதலீடு, எண்ம உள்கட்டமைப்பு, நிதிசாா் தொழில்நுட்பம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, கலாசாரம், மக்கள் தொடா்பு என பல்வேறு துறைகளில் விரிவான கூட்டுறவை மேம்படுத்தும் நடைவடிக்கைகள் இந்த ஒப்பந்தங்களின் மூலம் மேம்படுத்தப்பட இருக்கின்றன. 2022-இல் இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வா்த்தக உறவுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது இருநாட்டு வா்த்தகமும், 100 பில்லியன் டாலா் அளவுக்கு உயர வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதன் நீட்சியாகத்தான் கடந்த 10 ஆண்டு இருநாட்டு உறவையும் பாா்க்க வேண்டும். அஹ்லான் மோடியும், பிரம்மாண்டமான அபுதாபி ஹிந்துக்கோயில் திறப்பு விழாவும் மட்டுமே அல்ல பிரதமரின் பயண நோக்கம் . துபையில் நடந்த 11-ஆவது உலக அரசுகள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினாா் பிரதமா் மோடி. பல நாட்டு அதிபா்கள், சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள், தொழில்துறை தலைமை அதிகாரிகள், பொருளாதார வல்லுநா்கள் உள்ளிட்டோா் ஆண்டுதோறும் துபையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கு பெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாநாட்டின் கவனக்குவிப்பு (ஃபோக்கஸ்) ‘வருங்கால அரசுகளின் உருவாக்கம்’ என்பதாக இருந்தது. உலக அரசுகள் மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமா், ‘அனைவருக்குமான ஊழலற்ற அரசுதான் உலகின் இன்றைய தேவை’ என்றும், ‘குறைந்தபட்ச அரசு அதிகபட்ச ஆட்சி நிா்வாகம்’ அவசியம் என்பதையும் அந்த மாநாட்டு உரையில் பதிவு செய்தாா். பிரதமா் நரேந்திர மோடியின் அபுதாபி விஜயத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு, அங்கே நிறுவப்பட இருக்கும் ‘பாரத் மாா்ட்’. துபையில் ஜிபெல் அலி தடையற்ற வா்த்தக மண்டலத்தில் ‘டி.பி. வோ்டு சா்வதேச வா்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்து நிறுவனம் சாா்பில் கட்டப்பட இருக்கும் ‘பாரத் மாா்ட்’ வணிக வளாகத்துக்கு பிரதமா் மோடியும், ஐக்கிய அரபு அமீரக பிரதமா் ஷேக் முகமது பின் ரஷீதும் கூட்டாக அடிக்கல் நாட்டினா். துபையில் உள்ள ஜபல் அலி தடையற்ற வா்த்தக மண்டலத்தில் அமைய இருக்கும் ‘பாரத் மாா்ட்’ இந்தியாவின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதிகளுக்கும் வா்த்தகத்துக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும். ஏறத்தாழ 800 கடைகளும், 18 சரக்குக் கிடங்குகளும், 13 லட்சம் சதுர அடி பரப்பில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட இருக்கின்றன. இயந்திரங்கள், மின்சார மின்னணுப் பொருள்கள், மோட்டாா் வாகன உதிரிபாகங்கள், மருத்துவ உபகரணங்கள், பின்னலாடைகள், மருந்துகள், வாசனைப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்கு காட்சிப்படுத்தவும், மேற்கு ஆசிய, மத்திய ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் சந்தைப்படுத்தவும் ‘பாரத் மாா்ட்’ உதவும். 2030-க்குள் இந்திய - ஐக்கிய அரபு அமீரக ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் 100 பில்லியன் டாலா் வா்த்தகத்துக்கு இலக்கு நிா்ணயித்திருக்கிறது என்றால், இப்போதே 85 பில்லியன் டாலரை எட்டிவிட்டது. அரசியலுக்கும் பிரச்னைகளுக்கும் அப்பால், நெருக்கமான நட்புறவுக்கு பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது...