நீதிபதிகள் இருவரும் மாறுபடும் கருத்தாகிய, பொதுநோக்கு என்பது என்ன என்ற கேள்வியும்கூட, நிலம் கையகச் சட்ட வரையறைக்குள் தெளிவாகவே இருக்கிறது. மேலும், ஊரகம் என்றால் நான்கு மடங்கு சந்தை மதிப்பு விலையாக தரப்பட வேண்டும், பொதுநோக்கத்துக்காக தனியாருக்கு கையகப்படுத்தினால் அதற்கான நிபந்தனைகள் என்ன, எத்தனை காலத்துக்குள் அத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும், தனியாருக்காக அரசு நிலம் கையகப்படுத்தினால் 80 விழுக்காட்டினரின் ஒப்புதல் இருந்தாக வேண்டும் என்றெல்லாம் தெளிவான விதிமுறைகள் நிலம் கையகச் சட்ட வரைவில் வகுக்கப்பட்டு விட்டதால் இந்தத் தீர்ப்பில் புதிதாக ஒன்றுமில்லை.