லஞ்சம் கொடுக்க, வாங்க மறுப்பவர் மிகச் சிலராக இருப்பதுபோலவே, பணப்பட்டுவாடாவை விரும்பாதவர்களும் மிகச் சிலராகவே இருக்கின்றனர். லஞ்சமாகப் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அரசியல்வாதிகள் நம்பும்வரை, பணப்பட்டுவாடாவைத் தடுத்துவிடவோ, முடிவுக்குக் கொண்டுவரவோ முடியாது. கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா போன்ற கேள்வியைப் போலத்தான் பணப்பட்டுவாடா பிரச்னையும். படித்தவர்களும், விவரம் தெரிந்தவர்களும் பணம், இலவசம் போன்றவற்றிற்கு விலைபோகாமல், தவறாமல் வாக்களிக்கும் நிலைமை ஏற்பட்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!