விபசாரத்தின் மூலம், கள்ளச் சாராயம் விற்றதன் மூலம், கடத்தல் தொழிலில் ஈடுபட்டதன் மூலம் பெரும் பணக்காரரான ஒருவர், பெரிய தொழிலதிபராகவோ, ஆன்மிகவாதியாகவோ, அரசியல் தலைவராகவோ மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது ஆரம்பகாலப் பின்னணி குறித்து எழுதவோ, பேசவோ யாராவது முற்பட்டால், அவர் அதை அவதூறு வழக்காக்க முடியும். கூறப்படுவது உண்மையாகவே இருந்தாலும், அதனால் ஏற்படும் பொது நன்மை என்ன என்கிற கேள்வி, சிறைத்தண்டனை பெற்றுத் தந்துவிடும். ஒருவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவது தவறு என்று கூறி சிறைத்தண்டனை அளிக்கும் அவதூறுச் சட்டம், தனி