முதலில் இது பெரிய பிரச்னையாக இல்லை. ஆனால், கடந்த 60 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் அரசு உயர் அதிகாரிகளும் வசதி படைத்தவர்களும் அதிகரித்து, அவர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கும் வசதியும் இருப்பதால், மருத்துவம், பொறியியல் பயில வருவோரின் வாய்ப்புகளை இடஒதுக்கீட்டில் இருப்போரே பொதுப் பிரிவிலும் எடுத்துக்கொள்வது அதிகரித்தது. இது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளிப்படையாக விவாதித்தால், பொதுப் பிரிவினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.