நீதிக்குள்ளுமா சாதி?
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்குரைஞர் விசாரணை நடத்தும் அறைக்குள் நுழைந்து கூச்சல் போட்டதோடு, "நீ உன் மாநிலமாகிய காஷ்மீருக்குப் போ' என்று தமிழக வழக்குரைஞர்கள் கோஷமிட்டிருக்கும் செயல் இந்திய அளவில் தமிழக நீதிமன்றங்களின் நிலையை அம்பலப்படுத்துவதாக உள்ளது.










