எனக்குத் தெரிந்தவரையில் பாரதியின் சின்னச் சங்கரனும், புதுமைப்பித்தனின் கந்தசாமிப் பிள்ளையும், கல்கியின் வந்தியத்தேவனும், சிவகாமியும் பெற்றுள்ள இடம் பாத்திரப் படைப்பின் மேன்மைக்கு எடுத்துக்காட்டாகும். பங்கிம் சந்திரரின் "இந்திரா', "தேவி செளது ராணி', சரத் சந்திரரின் "அமூல்யன்', "சரயூ', "காட்கரியின் வசுந்தரா', "விருந்தாவன்' - இவர்களெல்லாம் அந்தந்த மாநிலங்களில் மிகப் புகழ்பெற்ற பாத்திரங்கள். தமிழ்நாட்டில் அப்படிச் சில பாத்திரங்களை நினைவுகூரத் தொடங்கினால், அண்மைக் காலங்களில் ஜெயகாந்தனின் கதாபாத்திரங்கள் மட்டுமே நினைவுக்கு வரும் என்பது அவருக்குள்ள தனிச் சிறப்பாகும்.