காங்கிரஸ் கட்சி இந்திய ஜனநாயகத்தின் வேருக்கு வலிமை சேர்த்த பங்களிப்புகள் ஏராளம், ஏராளம். அப்படிப்பட்ட கட்சி, மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தவுடன், தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்வதை விடுத்து, பொறுப்பான எதிர்க்கட்சியாக எப்படி செயல்படுவது என்பதற்கான செயல்திட்டங்களை வகுக்க முற்படுவதை விட்டு, அமைச்சர் ஸ்மிருதி இரானி பி.ஏ. பட்டதாரியா, பி.காம். பட்டதாரியா, அவர் தனது துறையை நிர்வகிக்கும் திறமையுள்ளவரா இல்லையா போன்ற சில்லறைச் சில்மிஷச் சர்ச்சைகளில் ஈடுபடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.