÷இப்போதைய நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும், சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறுகிறார். அரசியல், நிர்வாகம், சமூகம், நீதித்துறை, பொருளாதாரம் என்று பல தளங்களில் சீர்திருத்தம் மேற்கொண்டாக வேண்டும். ராகுல் காந்தி இதில் எந்த சிஸ்டத்தை, அதாவது நடைமுறையை, மாற்ற விரும்புகிறார், அதில் எப்படிப்பட்ட மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறார் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்க இந்தப் பேட்டி அற்புதமான வாய்ப்பாக இருந்திருக்கும். பொத்தாம் பொதுவாக எதையோ சொல்லி ராகுல் காந்தி தனது அறியாமையை வெளிப்படுத்தியதுதான் மிச்சம்.